திருத்தந்தையின் ஆப்பிரிக்க நாடுகளுக்கான திருத்தூதுப் பயணத்தின் முதல் நாள் நிகழ்வுகள்
இம்மானுவேல் மரியான் – வத்திக்கான்
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கான திருத்தூதுப் பயணத்தை ஏப்ரல் 13ஆம் தேதி திங்கள்கிழமை இன்று தொடங்குகிறார்.
இன்று காலை உரோமை நேரப்படி 9 மணிக்கு ஃபியூமிசினோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜீயர்ஸின் ஹவாரி பூமேடியேன் சர்வதேச விமான நிலையத்திற்கு அல்ஜீரிய நேரப்படி காலை 10 மணிக்கு வந்து சேர்கிறார்.
அங்கு அவர் வரவேற்கப்பட்டு காலை மணி10:45 க்கு மகாம் எச்சாஹித் தியாகிகள் நினைவிடத்தைப் பார்வையிட்டு அங்கு வாழ்த்துரை வழங்குகிறார்.
பின்னர் மணி 11:15 க்கு எல் மௌராடியா ஜனாதிபதி மாளிகையில் குடியரசுத் தலைவரை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கிறார்.
தொடர்ந்து நண்பகல் 12:00 மணிக்கு ஜமா அல் ஜசீர் மாநாட்டு மையத்தில் அதிகாரிகள் சமூக அமைப்புகள் மற்றும் தூதரக உறுப்பினர்களுடன் சந்தித்து அங்கு உரையாற்றுகிறார்.
மீண்டும் பிற்பகல் மணி 03:45 க்கு அல்ஜியர்ஸின் பெரிய மசூதியைப் பார்வையிடுகிறார். இது மக்களிடையே ஆன்மீக ஒற்றுமையை வெளிப்படுத்தக்கூடியதாக அமைகிறது.
மாலை மணி 04:35 க்கு தனிப்பட்ட முறையில் பாப் எல் ஓயெத் பகுதியில் உள்ள அகுஸ்தினார் மிசினரி சகோதரிகளின் நட்புறவு மையத்திற்கு சென்று அவர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.
பின்னர் மாலை மணி 05:10 க்கு ஆப்பிரிக்கா அன்னை பேராலயத்தில் அல்ஜீரிய மக்களைச் சந்தித்து உரையாற்றுகிறார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
