தேடுதல்

இளம்தம்பதியை ஆசீர்வதிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இளம்தம்பதியை ஆசீர்வதிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

நேர்காணல்: திருமணத் தம்பதியருக்கு திருத்தந்தையின் மடல்

தம்பதியரே, நீங்கள் ஒருவர் ஒருவர் மீது புன்னகை காட்டுங்கள். – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருமண வாழ்வு, மற்றும், குடும்பத்தை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அன்பின் மகிழ்வு (Amoris laetitia, 8 ஏப்ரல் 2016) திருத்தூது அறிவுரை மடல் வெளியிடப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி, திருஅவையில் 2021ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி, புனித யோசேப்பின் விழாவன்று, “Amoris laetitia குடும்ப” ஆண்டு துவக்கப்பட்டது. 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் தேதி முதல், 26ம் தேதி வரை, உரோம் மாநகரில் நடைபெறவிருக்கும், பத்தாவது குடும்பங்கள் உலக மாநாட்டின் நிறைவோடு இந்த குடும்ப ஆண்டு நிறைவடையும். இந்த குடும்ப ஆண்டையொட்டி, 2021ம் ஆண்டு டிசம்பர் 26, ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட திருக்குடும்ப விழாவன்று திருத்தந்தை உலகின் அனைத்துத் திருமணமான தம்பதியருக்கு மடல் ஒன்றை வெளியிட்டார். அம்மடல் பற்றி இன்று பேசுகிறார், அருள்பணி முனைவர் டென்னிஸ். மரியின் ஊழியர் சபையைச் சார்ந்த இவர், உரோம் மரியானும் மரியியல் பாப்பிறை நிறுவனத்தின் தலைவராவார்.     

நேர்காணல்: திருத்தந்தையின் மடல்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 January 2022, 12:13