திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – மறைக்கல்வியாளர்களுக்கான யூபிலி
மெரினா ராஜ் – வத்திக்கான்
செப்டம்பர் 26 வெள்ளிக்கிழமை முதல் 28 ஞாயிற்றுக்கிழமை வரை மறைக்கல்வியாளர்களுக்கான யூபிலியானது திருஅவையில் கொண்டாடப்படுகின்றது. செப்டம்பர் 26, வெள்ளிக்கிழமை காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் மற்றும் பிற பெருங்கோவில்களின் புனிதக் கதவு வழியாக பெருங்கோவில்களுக்குள் நுழைந்து பாவ மன்னிப்பு திருவருளடையாளம் மற்றும் திருப்பலி வழியாக இறை அருளை பெற இருக்கின்றனர்.
மாலையில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் உரோம் உள்ளூர் நேரம் மாலை 6.30 மணியளவில் மறைக்கல்வியாளர்களுக்கான யூபிலி நாள் முன்தயாரிப்பு செப வழிபாடானது நடைபெறும். மறுநாள் செப்டம்பர் 27, சனிக்கிழமை காலை 10 மணியளவுக் திருத்தந்தையின் பொது மறைக்கல்வி உரையில் பங்கேற்கின்றனர். மாலையில் உரோமில் உள்ள பல்வேறு தலத்திருஅவை ஆலயங்களில் பல்வேறு மொழிகளில் மறைக்கல்வி உரையானது வழங்கப்பட உள்ளது. செப்டம்பர் 28, ஞாயிறு காலை 10 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழிநடத்தும் திருப்பலியுடன் இந்த மறைக்கல்வியாளர்களுக்கான யூபிலியானது நிறைவு பெற இருக்கின்றது.
இத்திருப்பலியின்போது இத்தாலி, இஸ்பெயின், இங்கிலாந்து, போர்த்துக்கல், பிரேசில், மெக்சிகோ, இந்தியா, தென்கொரியா, கிழக்குத்திமோர், ஐக்கிய அரபு நாடுகள், பிலிப்பீன்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடுகள், மொசாம்பிக், பெரு, தொமினிக்கன் குடியரசு நாடுகள் ஆகியவற்றை சார்ந்த 39 பேர் புதிய மறைக்கல்வியாளர்களாக திருத்தந்தையிடமிருந்து திருச்சிலுவையினை அடையாளச்சின்னமாகப் பெற இருக்கின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்