அன்னை ஓர் அதிசயம் – விண்ணேற்பு அன்னை ஆலயம் – வேலூர் மறைமாவட்டம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
அன்னை ஓர் அதிசயம் என்னும் நமது நிகழ்வில் இன்று வேலூர் மறைமாவட்டத்திலுள்ள விண்ணேற்பு அன்னை பேராலயம் பற்றியக் கருத்துக்களை நம்முடம் பகிர்ந்து கொள்ள இருப்பவர் அருள்முனைவர் ராய் இலாசர். Laudato si இறைவா உமக்கே புகழ் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சுற்றுமடல் வெளியிடப்பட்டதன் 10ஆம் ஆண்டை முன்னிட்டு உரோமில் நடைபெற இருக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியாவிலிருந்துஇத்தாலியின் உரோம் நகருக்கு வருகை தந்திருக்கும் அருள்தந்தை அவர்கள், நம் வத்திக்கான் வானொலிக்கு வருகை தந்து விண்ணேற்பு அன்னை ஆலயம் பற்றியக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
வேலூர் மறைமாவட்ட அருள்பணியாளரான அருள்முனைவர் ராய் லாசர் அவர்கள், 132 இலத்தீன் கத்தோலிக்க மறைமாவட்டங்களில் உள்ள ஏறக்குறைய 12000க்கும் அதிகமான குருக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய மறைமாவட்ட குருக்கள் பேரவையின் தலைவராக உள்ளார். ஜெர்மனியின் உர்பெர்க் பல்கலைக்கழகத்தில் மேய்ப்புப்பணி இறையியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள தந்தை அவர்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடல், ஆன்மிகம், மேய்ப்புப்பணி ஆலோசனை, மதம், சமாதானம், சமூகவியல் மற்றும் உளவியல், இளையோர் வழிகாட்டி என பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். சென்னை பல்கலைக்கழகம், பூவிருந்தவல்லி திருஇருதய குருமடம், வேப்பூர் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆன்மிக மையம் ஆகியவற்றில் மேய்ப்புப்பணி இறையியல் சார்ந்த பாடங்களைக் கற்பித்தவர். வேலூர் மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குத்தளங்களில் உதவிப் பங்குத்தந்தை, பங்குத்தந்தை, மறைமாவட்ட மேய்யப்புப்பணி நிலைய இயக்குநர், புனித பிரான்சிஸ் சவேரியார் இளங்குருமட உதவி இல்லத்தந்தை மற்றும் இல்லத்தந்தை என பலநிலைகளில் பணிபுரிந்துள்ளார். மேலும் தமிழ் இறையியல் மன்றத்தின் செயலராகவும், மறைமாவட்ட குருக்கள் பேரவையின் தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இவரது சிறப்பான பணியின் காரணமாக, மனித உரிமை விருது மற்றும் நேரு கல்விப்பணி விருதுகளையும் பெற்றுள்ளார். தந்தை அவர்களை வேலூர் மறைமாவட்டத்திலுள்ள விண்ணேற்பு அன்னை பேராலயம் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்