தேடுதல்

புனிதர் ஃபுல்பெர்ட் புனிதர் ஃபுல்பெர்ட்  

இன்றைய புனிதர்

ஏழை மாணவர்களின் கல்விக்கண் திறந்து அவர்களது வாழ்வின் முன்னேற்றத்திற்கு தன்னை அர்ப்பணித்து கொண்ட ஆயர் ஃபுல்பெர்ட்டினை திருஅவை புனிதராக உயர்த்தியது.

புனிதர் ஃபுல்பெர்ட்

இத்தாலி நாட்டில் வாழ்ந்த இறைபக்தி நிறைந்த குடும்பத்தில் கி.பி. 960 ஆம் ஆண்டு பிறந்தார் ஃபுல்பெர்ட். கத்தோலிக்க விசுவாசத்தில் வேரூன்றி வளர்ந்த ஃபுல்பெர்ட் தன் தொடக்க கல்வியினை ரீம்ஸ்  நகரில் பயின்று ஜெர்பர்ட் என்ற ஆசிரியரின் வழிகாட்டுதலின்படி வாழ்ந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய இவர் குருத்துவ அருட்பொழிவு பெற்று கி.பி 990 ஆம் ஆண்டு சார்ட்ரெஸ் நகரில் கல்விக்கூடத்தினை கட்டியெழுப்பி கல்விப்பணியினை மேற்கொண்டார். சார்ட்ரெஸ் நகர ஆலயத்தின் தலைமைச் செயலராகவும் போய்டியர்சில் அமைந்திருந்த புனித ஹிலாரி ஆலயத்தின் கருவூலக்காப்பாளராகவும் பணிகளை செய்த ஃபுல்பெர்ட் சார்ட்ரெஸ் நகர ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

கி.பி. 1020 ஆம் ஆண்டு சார்ட்ரெஸ் நகர பேராலயம் சமூக விரோதிகளால் தீயிட்டு அழிக்கப்பட்டபோது கடும் கண்டனம் தெரிவித்த ஆயர் ஃபுல்பெர்ட் பேராலயத்தினை உடனே புதுப்பித்து அர்ச்சிப்பு செய்தார். துறவிகள் மீது அளவற்ற அன்பு கொண்ட இவர்தம் மறைமாவட்ட குருக்களின் வாழ்வியல் முறைகளை நெறிப்படுத்தி அவர்கள் ஆண்டவரின் பணிகளை செய்ய ஊக்கமளித்தார்.ஆயராக தன் பணிகளை செய்தபோதும் தான் நிறுவிய கல்விக்கூடத்தில் ஆசிரியராக பணி செய்து கல்வி சேவை புரிந்த ஆயர் ஃபுல்பெர்ட் கி.பி. 1029 ஆம் ஆண்டு ஏப்ரல் இறைவனடி சேர்ந்தார்.

ஏழை மாணவர்களின் கல்விக்கண் திறந்து அவர்களது வாழ்வின் முன்னேற்றத்திற்கு தன்னை அர்ப்பணித்து கொண்ட ஆயர் ஃபுல்பெர்ட்டினை திருஅவை புனிதராக உயர்த்தியது. இன்று புனித ஃபுல்பெர்ட் திருவிழாவினை கொண்டாடுகின்ற நாம்  பொருளாதார வசதியின்மையால் கல்வியினை தொடர முடியாமல் தவிக்கின்ற மாணவர்களுக்கு உதவிகள் செய்து அவர்களை இறைவன் ஆசிர்வாதங்களால் நிரப்பும்படியாக செபிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 ஏப்ரல் 2026, 16:08