கேரளாவில் புதிய ஆயர்கள் நியமனம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அங்கீகாரத்துடன் கேரளாவில் Tellicherry உயர் மறைமாவட்டப் பேராயராக, அதன் துணை ஆயர் Joseph Pamplany அவர்களையும், பாலக்காட்டின் ஆயராக, அதன் துணை ஆயர் Peter Kochupuruckal அவர்களையும் நியமித்துள்ளது சீரோ மலபார் வழிபாட்டுமுறைத் திருஅவை.
Tellicherry யின் பேராயர் George Njaralakatt அவர்களின் பணிஓய்வு விருப்பத்தை ஏற்றுக்கொண்ட சீரோ மலபார் திருஅவை, Tellicherryயின் துணை ஆயராக இதுநாள் வரை செயல்பட்டு வந்த ஆயர் Joseph Pamplany அவர்களை அம்மறைமாவட்டத்தின் பேராயராகத் தேர்வு செய்துள்ளது.
1969ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பிறந்த புதிய பேராயர் Joseph Pamplany, 2017 செப்டம்பர் முதல் Tellicherry உயர் மறைமாவட்டதின் துணை ஆயராகப் பணியாற்றி வந்துள்ளார்.
பாலக்காடு மறைமாவட்டத்தின் ஆயர் Jacob Manathodath அவர்களின் பணி ஓய்வை ஏற்ற சீரோ மலபார் திருஅவை, அம்மறைமாவட்டத் துணை ஆயர் Peter Kochupuruckal அவர்களைப் பாலக்காடு ஆயராகத் தேர்வு செய்துள்ளது.
1964ம் ஆண்டு மே 29ல் பிறந்த ஆயர் Peter Kochupuruckal, 2020ம் ஆண்டு ஜூன் முதல் பாலக்காட்டின் துணை ஆயராகப் பணியாற்றி வருகிறார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்