தேடுதல்

தடுப்பூசி தடுப்பூசி  (AFP or licensors)

சியோல் உயர்மறைமாவட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் திருத்தந்தை

கோவிட் பெருந்தொற்று தடுப்பூசித் திட்டங்களுக்கென வத்திக்கானுக்கு 14 இலட்சம் டாலர்களை அனுப்பியுள்ள Seoul உயர்மறைமாவட்டம்,

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

'அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படவேண்டும்' என்ற திட்டத்திற்கென தென்கொரியா திருஅவை தொடர்ந்து வழங்கிவரும் நிதியுதவிகளுக்கு, மீண்டும் ஒருமுறை தன் நன்றியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கென Seoul உயர்மறைமாவட்டம் தன் விசுவாசிகளிடம் நிதி திரட்டி அனுப்பியதற்கு நன்றி தெரிவித்து, பேராயர் Peter Chung Soon-taick அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களின் தாராள மனதிற்கு நன்றி கூறுவதாகவும்,  Seoul மக்களுடன் தன் நெருக்கத்தை வெளியிடுவதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் கோவிட் பெருந்தொற்று தடுப்பூசித் திட்டங்களுக்கென வத்திக்கானுக்கு 14 இலட்சம் டாலர்களை அனுப்பியுள்ள Seoul உயர்மறைமாவட்டம், கடந்த ஆண்டு இறுதிவரை, இத்திட்டத்திற்கென 34 இலட்சம் டாலர்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வத்திக்கான் வழியாக உதவிகளை ஆற்றுவதோடு, உலகின் பல பகுதிகளில் ஏழ்மையால் வாடும் மக்களுக்கு நேரிடையாகவும் பல்வேறு உதவிகளைத் தொடர்ந்து ஆற்றி வருகிறது தென்கொரியாவின் Seoul உயர்மறைமாவட்டம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 January 2022, 15:46