தேடுதல்

இளம்வயதில் திருத்தந்தை பிரான்சிஸ் இளம்வயதில் திருத்தந்தை பிரான்சிஸ் 

நிரந்த துறவு வார்த்தைப்பாட்டு நாளினைக் கொண்டாடும் திருத்தந்தை

1973ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் நாள் இயேசு சபை அருள்பணியாளராக நித்திய வார்த்தைப்பாட்டின் வழியாகத் தன்னையே முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து 51 ஆண்டுகள் இறை உறவில் வாழ்ந்து வருகின்றார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

Jorge Bergoglio என்னும் இயற்பெயர் கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் இயேசு சபையில் நுழைந்து, நிரந்தர துறவற வார்த்தைப்பாட்டின் வழியாகத் தன்னை இறைவனுக்கு அர்ப்பணித்த 51 ஆம் ஆண்டினை இன்று நினைவுகூர்கின்றார்.

ஏப்ரல் 22 திங்கள் கிழமை தனது நிரந்தர துறவு வார்த்தைப்பாட்டு நாளினை நினைவுகூரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1958ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் நாள் இயேசு சபையில் சேர்ந்து, 1969ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் நாள் குருவாக அருள்பொழிவு பெற்றார்.

1973ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் நாள் இயேசு சபை அருள்பணியாளராக நித்திய வார்த்தைப்பாட்டின் வழியாகத் தன்னையே முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து 51 ஆண்டுகள் இறை உறவில்  வாழ்ந்து வருகின்றார்.

மேலும் நாளைய தினம் ஏப்ரல் 23 செவ்வாய்க்கிழமையன்று திருஅவை நினைவுகூரும் புனித ஜார்ஜியார் நாளன்று தனது பெயர் கொண்ட நாளை சிறப்பிக்க உள்ளார் Jorge Bergoglio எனும் இயற்பெயர் கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 April 2024, 10:47