தேடுதல்

இயேசுவை அறிவிக்கும்போது அவர் நம்மில் வாழ்கிறார்

அச்சமுற்றவர்களாக, அதேவேளை, பெருமகிழ்வுடன், இயேசு உயிரோடிருக்கிறார் என்ற செய்தியை சீடர்களுக்கு உரைக்கச் செல்லும் வழியில் இயேசுவை எதிர்கொள்கிறார்கள் பெண்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உயிர்ப்பு நாளன்று, உயிர்த்த இயேசுவை முதன் முதலில் சந்தித்த பெண்கள் பற்றிக் கூறும் ஏப்ரல் 10, திங்கள்கிழமையின் நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து அந்நாளில் தன் நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உயிர்ப்பு ஞாயிறுக்கு மறுநாளான திங்களன்று இத்தாலி முழுவதற்கும் விடுமுறையாக இருந்ததால்,  நண்பகலில் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் பல ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் குழுமியிருக்க அவர்களுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை, சோகத்தாலும் அச்சத்தாலும் முடங்கிப் போகாமல் காலையிலேயே கல்லறையை நோக்கிச் சென்றப் பெண்களைப் போன்று நாமும் உயிர்த்த இயேசுவைத் தேடிச்செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

கல்லறையைக் காணவந்த பெண்கள் கல்லறை காலியாக இருப்பதைப் பார்த்தபோது அச்சமுற்றவர்களாக, அதேவேளை, பெருமகிழ்வுடன் அவ்விடயத்தை சீடர்களுக்கு உரைக்கச் செல்லும் வழியில் இயேசுவை எதிர்கொள்கிறார்கள் என்ற  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாமும் அவரைக் குறித்து அறிவிக்கச் செல்லும்போது அவர் நம்மை எதிர்கொள்வார் என எடுத்துரைத்தார்.

இயேசுவைக் குறித்து நாம் அறிவிக்கும்போது பல்வேறு தடைகளை, சிரமங்களை நாம் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் பலவேளைகளில் நாம் அவரை நமக்கு மட்டும் என வைத்துக்கொண்டு மௌனம் காக்கிறோம், ஆனால், நாம் அவருக்கு சான்று பகரும்போது அவரை எதிர்கொண்டு சந்தித்து பலம் பெறுகிறோம் என்பதை உயிர்த்த கிறிஸ்துவைச் சந்தித்த பெண்கள் நமக்குக் காட்டுகிறார்கள் என மேலும் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.,

குழந்தை ஒன்று பிறந்தவுடன் அந்த மகிழ்ச்சிச் செய்தியை நாம் மற்றவர்களுடன் பகிர்வதுபோல், இயேசுவைப் பற்றிய உண்மையை, அதாவது, உயிர்ப்பும் வாழ்வுமான அவரை மற்றவர்களுக்கு அறிவிக்கும்போது அவர் நம்மில் வாழ்கிறார் என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை, கல்லறையை மூடியிருந்த கல்லை யார் புரட்டுவார் என்பது தெரியாதிருந்தும் கல்லறை நோக்கிச் சென்ற பெண்கள், சிலுவையில் உயிர்விட்டவர் இன்னும் உயிரோடு வாழ்கிறார் என்பதை அறிவிக்க துணிச்சலுடன் செல்வதை சுட்டிக்காட்டினார்.

அன்று இயேசுவின் கல்லறை நோக்கிச் சென்ற பெண்களைக் குறித்து அறிந்துள்ள நாம், இறுதியாக எப்போது இயேசுவுக்குச் சான்று பகர்ந்தோம், நம் வாழ்வில் தினமும் சந்திக்கும் மக்களுக்கு என்ன மகிழ்ச்சிச் செய்தியை வழங்குகின்றோம், இயேசுவை ஏற்றுக்கொண்ட நம்மில் என்ன மாற்றத்தை பிறர் காண்கின்றனர் என்ற கேள்விகளை முன்வைத்து தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையை நிறைவுச் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 ஏப்ரல் 2023, 13:01

அல்லேலூயா வாழ்த்தொலி என்றால் என்ன?

அல்லேலூயா வாழ்த்தொலி செபம் (அல்லது அல்லேலூயா வாழ்த்தொலி) நான்கு மரியா செபங்களில்  ஒன்றாகும் (மற்றவை l’Alma Redemptoris Mater,  l’Ave Regina Coelorum e il Salve Regina மீட்பரின் அற்புத அன்னை , வானக அரசியே வாழ்க மற்றும் வாழ்க அரசியே).

இது 1742ம் ஆண்டில், திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அவர்கள், இயேசுவின் உயிர்ப்பு காலத்தில் , அதாவது உயிர்ப்பு ஞாயிறு முதல் தூய ஆவியார் பெருவிழா  நாள் வரை, மரணத்தின் வெற்றிக்கு அடையாளமாக மூவேளை செபத்திற்குப் பதிலாக, உயிர்ப்பு செபம் செபிக்கப்பட வேண்டுமென அறிவித்தார்..

அச்செபத்தை, மூவேளை செபத்தைப்போல, ஒரு நாளைக்கு மூன்று முறை அதாவது காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் , கடவுளுக்கும் மரியாவுக்கும் ஒவ்வொரு நாளும் செபிக்க வேண்டும் : .

ஒரு பக்தியுள்ள மரபுப்படி, இந்தச் செபம், ஆறு அல்லது பத்தாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகும். அதேநேரத்தில், அச்செபம் பரவத்தொடங்கியது பற்றி 13ம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அது பிரான்சிஸ்கன் கட்டளை செபத்தில் சேர்க்கப்பட்டபோது. இது நான்கு சுருக்கமான வசனங்களை உள்ளடக்கியது, இவை ஒவ்வொன்றும் அல்லேலூயாவுடன் முடிவடைகின்றன. விண்ணக அரசியான மரியாவுக்கு  கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் உள்ள  மகிழ்ச்சியுடன் செபிக்கப்படுகிறது.

ஏப்ரல் 6, 2015, உயிர்ப்பு பெருவிழாவுக்கு அடுத்த நாளன்று , இயேசுவின் உயிர்ப்பு காலத்தில்  திருத்தந்தை  பிரான்சிஸ்  அவர்கள், இந்த செபத்தைப் பற்றி கூறும்போது போது, இதயத்தின் மனநிலை என்னவாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்

 "... மரியா  அகமகிழுமாறு நாம் அவரை அழைக்கிறோம், ஏனெனில், மரியா தன் வயிற்றில் தாங்கியவர், அவர் வாக்குறுதி அளித்தது போலவே உயிர்த்துவிட்டார்; நாம் மரியின் பரிந்துரையில் நம்பிக்கை வைப்போம். உண்மையில், நம்முடைய மகிழ்ச்சி மரியின்  மகிழ்ச்சியின் ஒரு பிரதிபலிப்பாகும், ஏனென்றால் மரியாவே இயேசுவின் நிகழ்வுகளைக் காக்கிறவர், விசுவாசத்தோடு பாதுகாக்கிறவர்.. எனவே, தாய் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதால்,  மகிழ்ச்சியாக இருக்கும் பிள்ளைகள் என்ற உணர்வில்,  இந்த செபத்தை நாம் செபிப்போம்.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >